கரோனா தொற்று பரவல் எதிரொலி; சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தம்: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழகத்தில் கரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு பகுதியாக தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்தபடி தான் பயணம் செய்ய வேண்டும். நின்றபடி செல்ல பயணிகளுக்கு அனுமதி கிடையாது. அதேநேரத்தில் பேருந் தில் பயணம் செய்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத் துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e5ygGo
via
No comments