எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை: கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
கும்பகோணம் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, கும்பகோணம் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் து.ராமநாதன் (63).எண்ணெய் வியாபாரியான இவரது வீட்டுக்கு கடந்த 15.3.2020 அன்று இரவு பத்திரிகை கொடுப்பதுபோல வந்த 5 பேர், ராமநாதனை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, அவரது மனைவி விஜயாவை தாக்கி, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QQgmPK
via
No comments