Breaking News

வேலூரில் நேதாஜி காய்கறி மார்க்கெட் அடைப்பு: மாநகராட்சிக்கு எதிராக வியாபாரிகள் அதிருப்தி

வேலூரில் காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் நேதாஜி மார்க்கெட் பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு தகரத்தை வைத்து அடைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடும் வேலூர் நேதாஜி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளை மூடி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காட்பாடி உழவர் சந்தை காட்பாடி டான்போஸ்கோ பள்ளியிலும், வேலூர் டோல்கேட் உழவர் சந்தை தொரப்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும், குடியாத்தம் உழவர் சந்தை குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eh6uqx
via

No comments