ஆம்பூர் அருகே ஒற்றை யானையால் உறக்கத்தை இழந்த விவசாயிகள்
ஆம்பூர் பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விளைப் பொருட்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால், விவ சாயிகள் உறக்கத்தை இழந்து யானையை விரட்ட அவரவர் நிலங்களில் காவல் காத்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஆம்பூர் அடுத்த பொன்னப்பல்லி, பாலூர், கொத்தூர், சாரங்கல், ஓணாங்குட்டை, மாச்சம்பட்டு, ரெட்டிக்கிணறு ஆகிய கிராமங் களையொட்டியுள்ள விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QJBJ5u
via
No comments