ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிப்பகுதியில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம்: டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் ஆதங்கம்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிப் போட்டியில் எங்களை மீற அனுமதித்துவிட்டோம் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆதங்கப்பட்டார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி டேவிட் மில்லர் விளாசிய 62 ரன்கள் மற்றும் இறுதிக்கட்டத்தில் கிறிஸ் மோரிஸ் விளாசிய 36 ரன்களால் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3suuVWq
No comments