ஆம்பூர் நூருல்லாபேட்டை, காதர்பேட்டை பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர் வாராததால் சுகாதார சீர்கேடு: கரோனா தொற்று அலையால் பொதுமக்கள் அச்சம்
ஆம்பூர் நகராட்சியில் பல வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட் டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில், 3-வது வார்டுக்கு உட்பட்ட நூருல்லாபேட்டை, காதர்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இது தவிர ஆம்பூர் நகரில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள் இப்பகுதியைச் சுற்றியே உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xljwMp
via
No comments