சென்னையில் குறைந்த பெண்களின் வாக்குகள்; கட்சிகளின் செயல்பாடுகள் பெண்களைக் கவரவில்லை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் கருத்து

சென்னையில் கடந்த தேர்தலைவிட 50 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இருப்பினும், கடந்த தேர்தலில் பதிவானதைவிட இந்த தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் பெண்களைக் கவரவில்லை என்பதையே இது காட்டுகிறது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் பெண்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தன. இந்த தேர்தலில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பெண் வாக்காளர்களைக் கவர,உலக மகளிர் தினத்தன்றே இரு கட்சிகளும்போட்டி போட்டுக்கொண்டு, தேர்தல் அறிக்கையில் இடம்பெற இருந்த வாக்குறுதிகளை முன்கூட்டியே அறிவித்தன. சமையல் காஸ்சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என திமுகஅறிவித்த நிலையில், ஆண்டுக்கு 6 சிலிண்டர்இலவசம் என்று அதிமுக அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32bmtk5
via
No comments