தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்டம்தோறும் கண்காணிப்பு மையங்கள் தொடங்கப்படும்: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு மையங்களை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் லேசான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் கரோனா கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ், துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஜெ.மேகநாதரெட்டி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39ZNRWP
via
No comments