Breaking News

குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம்: அரசு வழங்க ஆனைமலை விவசாயிகள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி, ஆனைமலை கரவெளி பகுதியில் ஆண்டுக்கு இரு போகம் நெல் சாகுபடி நடக்கிறது. இரண்டாம் போக சாகுபடிக்காக, கடந்த நவம்பர் மாதம் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி, ஆனைமலை, பெத்தநாயக்கனூர், ரமணமுதலிபுதூர் பகுதிகளில் சுமார் 1100 ஏக்கரில் கோ-53, ஏஎஸ்டி- 16, ஏடிடி -53 மற்றும் ஏஎஸ்டி – 36 ரகங்களை சேர்ந்த சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக நெல் சாகுபடி செய்யப்பட்டது. 110 நாட்கள் சாகுபடி காலம் கொண்ட இந்த நெல் ரகங்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.

ஆனைமலை பகுதியில் நெல் அறுவடைப் பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அறுவடை செய்யும் நெல்லை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும், அத்துடன் நெல் கொள்முதல் விலையையும் அரசு உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wTE52i
via

No comments