வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் விநியோக வசதி: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனை களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண் ணிக்கை 600-ஆக அதிகரிக்க 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆக்சிஜன் விநியோக மையங்களை ஏற்படுத்தவுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக வீரியமாக இருப்பதால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத் தில் கரோனா தொற்றால் நேற்று 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 ஆயிரத்து 109 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 415 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, வேலூர் மாவட்டத்தில் தொற்று சதவீதம் 8.5 சதவீதமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vM8U7B
via

No comments