Breaking News

முழு ஊரடங்கு அமலாக்கத்தால் - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.300 கோடி ஜவுளி தேக்கம்: கூலிக்கு நெசவு செய்வோர், தொழிலாளர்கள் வேலையிழப்பு

கரோனா தொற்றுப் பரவலால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவுகளால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.300 கோடி மதிப்பிலான ஜவுளி தேக்கமடைந்து விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறி தொழில் விவசாயத்துக்கு அடுத்து நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய தொழிலாக உள்ளது. தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் வரை செயல்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வரை இவ்விரு மாவட்டங்களிலும் இத்தொழிலால் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3br8fAP
via

No comments