Breaking News

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் திடீரென 2 ஆயிரம் பேர் அதிகரிப்பு: பாதிப்பைக் குறைத்து காட்டுவதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் புகார்

சென்னையில் கரோனா தொற்றுக்குசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் திடீரென 2,008 பேர் அதிகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்தொற்று எண்ணிக்கையை மாநகராட்சி குறைத்து காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் கரோனா 2-ம் அலை பரவலில் கடந்த மே 12-ம் தேதி ஒரேநாளில் 7,564 பேருக்கு தொற்று உறுதியாகி உச்சநிலையை அடைந்தது. இதன் பின்னர் அன்றாடம் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இறங்குமுகமாக இருந்தது. கடந்த 18-ம் தேதி முதல் 500-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. 22-ம்தேதி 410 பேருக்கு தொற்று பாதித்து இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zRo5za
via

No comments