குழந்தைகளைப் பாதிக்கும் என்பதால் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயாராக வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

கரோனா 3-வது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்ற செய்திகள் வருவதால், தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளுக்கு, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவுறுத்தியுள்ளார்.
‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 8-ம் தேதி `அடுத்த அலையிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?' என்ற தலைப்பில், பொதுநல மருத்துவர் கு.கணேசன் எழுதிய கட்டுரை வெளியானது. அதில், 3-ம் அலை தாக்கினால், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிர தொற்றாக மாறலாம். பொதுசுகாதார துறைக்கு இது சவாலாகஅமையும். எனவே, குழந்தைகளுக்கான மருத்துவக் கட்டமைப்புகள், உபகரணங்களை இப்போதிருந்தே வலுப்படுத்துவதும், குழந்தை மருத்துவர்களையும், பணியாளர்களையும் அதிகப்படுத்துவதும் முக்கியம். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தயாராக வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gpfY5g
via
No comments