முக்கொம்பு வந்து சேர்ந்தது காவிரி நீர்: கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் ஜூன் 12-ம்தேதி திறக்கப்பட்ட காவிரி நீர்,நேற்று அதிகாலை 12 மணியளவில் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையிலிருந்து பாசனத்துக்காக இன்று (ஜூன் 16) தண்ணீர் திறக்கப்படுகிறது.
டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வரத்து விநாடிக்கு 892 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pYzDMt
via
No comments