குறுகிய காலத்தில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்த கோவை நிறுவனம்: 40 நாட்களில் 25 அரசு மருத்துவமனைகளுக்கு கிடைத்த ஆக்சிஜன் வசதி

பொதுவாக நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் 3 விதங்களில் அளிக்கப்படுகிறது. ஒன்று, திரவநிலை ஆக்சிஜனை மருத்துவமனைகளில் உள்ள பெரிய டேங்குகளில் நிரப்பி, அதிலிருந்து பைப்லைன் மூலம் கொண்டுசென்று அளிப்பது, இரண்டாவது ஆக்சிஜன் நிரப்பிய சிலிண்டர்கள் மூலம் அளிப்பது, மூன்றாவது ஆக்சிஜன் செறிவூட்டிகள் (கான்சன்ட்ரேட்டர்).
சந்தையில் உள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெளிக்காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து, நைட்ரஜனை வெளியிடுகின்றன. இந்த சிறிய கருவியை ஒரேநேரத்தில் ஒரு நோயாளிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் தொடர்ந்து 24 மணி நேரமும் பயன்படுத்த முடியாது. மேலும், இதற்கு தொடர் பராமரிப்பும் அவசியம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xoYcVj
via
No comments