Breaking News

கூடங்குளத்தில் ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது; 5, 6-வது அணு உலை கட்டும் பணி தொடக்கம்: 2027-ல் மின்உற்பத்தி தொடங்க திட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மற்றும்6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் பூமிபூஜையுடன் நேற்று தொடங்கின.ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் 2027-28ல் மின்உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் முதல் அணு உலையில் 2013-ம் ஆண்டு அக்.22-ம் தேதியும், 2-வது அணு உலையில் 2016-ம் ஆண்டு அக்.15-ம் தேதியும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு 950 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.29-க்கு விற்கப்படுகிறது. தற்போது முதல் உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UGDGBt
via

No comments