ஆளுநர் உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் வந்த புதுவை தலைமைச்செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள்
புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் இன்று அலுவலகங்களுக்கு வந்தனர். குறிப்பாக தலைமைச்செயலர் முதல் ஆட்சியர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆளுநர் உத்தரவை கடைப்பிடித்தனர்.
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சில நாட்களுக்கு முன்பு இரு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, நெசவாளர்கள் பயனடையும் வகையில் மாதத்தின் முதல் நாள் அரசு ஊழியர்கள் நமது பாரம்பரிய உடையான கதர், கைத்தறி ஆடைகளை அணிந்து வர வேண்டும். மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8utfWLk
via
No comments