கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி கிருஷ்ணா நீர் திறப்பு: இன்று தமிழக எல்லையை வந்தடையும்

ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்துவிநாடிக்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 16) காலை கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை வந்தடையும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் குடிநீர்த் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி-யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி-யும் கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gsXWiD
via
No comments