Breaking News

வெளிப்புற கிருமிநாசினி தெளிப்பு கரோனாவை ஒழிக்காது; மக்கள், தலைவர்களிடம் விழிப்புணர்வு இல்லை: வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள்

வெளிப்புற கிருமிநாசினி தெளிப்பு கரோனாவை ஒழிக்காது என்ற விழிப்புணர்வு பொதுமக்கள், அரசியல்தலைவர்களிடம் இல்லாத நிலையில், அதை வெளியில் சொல்ல முடியாமல் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா முதல் அலை பரவியபோது, தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்புத் துறை, குடிசை மாற்று வாரியம், கோயம்பேடு சந்தை நிர்வாகம் உள்ளிட்டவை உயரமான கட்டிடங்கள், சாலைகள், வளாகங்கள் போன்ற வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளிப்பில் சிறப்பு கவனம் செலுத்தின. கிருமிநாசினி தெளிப்பு சுரங்கத்தையும் அமைத்தனர். இந்த சுரங்கத்தால் கரோனா ஒழியாது என மத்திய அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அந்த முறை கைவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yW8u0Z
via

No comments