Breaking News

தேவையின்றி வெளியே சுற்றியவர்களிடம் பறிமுதல் செய்த வாகனங்களை ஊரடங்கு முடியும் வரை தர வேண்டாம்: காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றியவர்களிடம் பறிமுதல் செய்த வாகனங்களை ஊரடங்கு முடியும் வரை திருப்பித் தர வேண்டாம் என்று காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அவசர தேவைக்காக செல்பவர்கள், இ-பதிவு செய்த வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34LNooc
via

No comments