விதிமுறைகளை பின்பற்றாமல் வீட்டு வரி ரசீது வழங்கும் ஊராட்சி செயலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?- அரசு நில ஆக்கிரமிப்புகளை தடுக்க சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

மாவட்ட அளவில் பல்வேறு அரசு நிலங்களை ஆக்கிரமித்து பலர் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலர்கள் விதிகளை கவனிக்காமலும், பின்பற்றாமலும் `வீட்டு வரி ரசீது' வழங்கி விடுகின்றனர்.
சட்ட விதிகளை பின்பற்றாமல் ஊராட்சி செயலர்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுடன் கைகோர்த்து கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கும் வீட்டு வரி ரசீது கொடுக்கின்றனர். எனவே, வீட்டு வரி ரசீது வழங்கும் போது அதிகாரிகளை நியமித்து, வீடு கட்டியுள்ள நிலத்தின் பத்திரங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு இன்றி, உரிய விதிப்படி கட்டிய வீடுகளுக்கு மட்டுமே வீட்டு வரி ரசீது வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3x2VEN7
via
No comments