Breaking News

கரோனா பொதுமுடக்கத்தால் வருவாய் இன்றி மக்கள் தவிப்பு; முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்த நெருக்கடி தரும் தனியார் பள்ளிகள்: கடலூர் மாவட்டத்தில் பெற்றோர் கவலை

கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால் தான் அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்ல முடியும் என அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' பகிர்ந்து வருவதால் பெற்றோர் கவலையில் உள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டது. ஆனாலும் இணைய வழி பிரச்சினை தொடர்பாக பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பை சரிவர கவனிக்க முடியாத நிலை உருவானது. மேலும், சில பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப் படாமலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iRGHc6
via

No comments