Breaking News

நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; புதிய விதிமுறையால் தங்கத்தில் கலப்படம் தடுக்கப்படும்: பொதுமக்கள், வல்லுநர்கள் வரவேற்பு

நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய விதிமுறையால் தங்கத்தில் கலப்படம் செய்வது தடுக்கப்படும் என பொதுமக்கள், வல்லுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தைக் கண்காணிக்க 2000-ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை இடும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேல் நகை விற்பனையாளர்கள் உள்ளனர். ஆனால் பெரிய நகைக் கடைகளைத் தவிர, பெரும்பாலான விற்பனையாளர்கள் தர நிர்ணய அங்கீகாரம் பெறாத தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தங்க நகைகளில் கலப்படம் அதிகமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wxjzE4
via

No comments