ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் பல லட்சம் ரூபாய் நூதன திருட்டு- வட மாநில கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில், எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் ஒரு கும்பல் நூதன முறையில் பணம் திருடியது. இரு தினங்களில் மட்டும் ரூ.48 லட்சம் வரை திருட்டு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ``பணம் செலுத்தவும், எடுக்கவும் வசதியுள்ள ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில், ஏடிஎம் அட்டை மூலம் பணத்தை எடுப்பற்கான பொத்தான்களை அழுத்தும்போது பணம் வெளியே வரும். அப்போது, பணத்தை வெளிக்கொண்டு வரும் இயந்திரத்தின் வாயில் பகுதியை மூடவிடாமல், குறிப்பிட்ட நேரம் பிடித்துக் கொள்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xIHmAX
via
No comments