Breaking News

ஊடகங்கள் மீதான வழக்குகள் வாபஸ் அறிவிப்பு: முதல்வருக்கு ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு பாராட்டு

ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் `இந்து' என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்தித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y0HxaS
via

No comments