தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: சமூக வலைதளங்களில் பரவும் அறிவிப்பு விளம்பர பலகை

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளைமீட்கும் நடவடிக்கைகள் தற்போது வேகம் எடுத்துள்ள நிலையில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பலஆண்டுகளாக குடியிருந்து வரும் 11 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் விவரங்கள் குறித்த விளம்பர பலகை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமானதும், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதுமான புன்னை நல்லூர்மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 14,390 சதுர அடி இடம், கோயில் அருகே முஸ்லிம் தெருவில் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 11 பேர் மீது இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xGJrhe
via
No comments