Breaking News

ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு ஆசைப்பட்டு திருட்டு- விளாத்திகுளம் அருகே 2 காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோழி திருடிய வழக்கில் தலைமைக் காவலர் உட்பட 2 போலீஸார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன்(33). இவர், காடல்குடி காவல் நிலையம் அருகே கோழிஇறைச்சி கடை நடத்தி வருகிறார்.கடந்த 16-ம் தேதி இரவு முத்துச்செல்வனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அவர் தூங்கிக் கொண்டிருந்ததால், அவரது மனைவி ஜெயா எடுத்து பேசியுள்ளார். எதிர்முனையில் பேசியவர், “காடல்குடி காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம், உடனடியாக ஒரு கிலோ கோழி இறைச்சி கொண்டு வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2W8WHOi
via

No comments