Breaking News

கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 300 படுக்கைகள் அமைப்பு; பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கரோனா தொற்று 3-ம் அலையை எதிர்கொள்ள பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டபெரியார் நகரில் ரூ.15 கோடியே52 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுதிறந்து வைத்தார். தொடர்ந்து,மேம்படுத்தப்பட்ட அம்மருத்துவமனையை பார்வையிட்டு, நவீனமருத்துவ கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37JiLkt
via

No comments