முதல்வர் உத்தரவால் சுதந்திர தினத்தன்று முதன்முறையாக சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு கவுரவம்: பாரதியார், பாரதிதாசன் சிலைகள், அலட்சியத்தால் தவிர்ப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவால் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சென்னையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவில்லை.
தமிழக அரசு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. ஆனால் சுதந்திர தினத்தன்று அதற்காக போராடிய வீரர்கள் மற்றும் தலைவர்களின் சிலைகள் இதுவரை கேட்பாரற்றே கிடந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37IxAEb
via
No comments