Breaking News

தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய நபர் கைது: என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). பாமக பிரமுகரான இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த, மதமாற்ற நிகழ்வுகளை தட்டிக்கேட்டு வந்தார். இதுதொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில், 2019 பிப்ரவரி 5-ம் தேதி ராமலிங்கத்தை ஒரு அமைப்பினர் கொடூரமாக கொலை செய்தனர். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் திருவிடைமருதூர், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் சதி திட்டம் தீட்டி ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது. இவர்களில், 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தம், 18 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lxfPQ6
via

No comments