Breaking News

திமுக நிர்வாகி கொலையில் கணவன், மனைவி கைது

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (52). 102 -வது வட்ட திமுக அவைத்தலைவர். கடந்த 18-ம் தேதி இரவு அண்ணா நகர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வழிமறித்த கும்பல் சம்பத்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. அவரது சடலத்தை கைப்பற்றிய அண்ணா நகர் போலீஸார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கீழ்பாக்கத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன் குமார், விநாயகம், இவரது மனைவி கற்பகம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3k7cZ1O
via

No comments