Breaking News

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையோரத்தில் ‘மக்கள் நாடாளுமன்றம்’

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் சாலையோரத்தில் `மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்' நேற்று நடைபெற்றது.

உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எதிர்க் கட்சிகள் முடக்கின. எனினும், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள், விவாதங்கள் இன்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இதைக் கண்டித்து ஆகஸ்ட் 23 முதல் 27-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் `மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்' நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ybW6Z0
via

No comments