மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் நிலத்தில் கழிவுநீர் தேக்கம்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கழிவுநீர் தேங்கி இருப்பதாக வந்த புகாரையடுத்து நேற்று காலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு குன்றத்தூர் - மாங்காடு சாலையையொட்டி கோயிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் கழிவுநீர் முழுவதும் கலந்து இருப்பதால் அதனை சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, இணை ஆணையர் கே.ரேணுகாதேவி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3izAdOQ
via
No comments