அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கப் பிரிவினர் வழக்கு

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூரில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின்னர், அவருக்கு மின் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது, கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xyggMr
via
No comments