பண மோசடி வழக்கில் திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 2 பேருக்கு சிறை

பண மோசடி வழக்கில் வேப்பூர் ஒன்றிய திமுக செயலாளர் உட்பட 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிஉள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரிடம், மினி லாரி வாங்க வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.1.62 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கூறி, ரூ.1.62 லட்சத்தை அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் அசோகன்(62) பெற்றுள்ளார். ஆனால், ஓராண்டாகியும் வங்கிக் கடன் பெற்றுத்தராத அசோகன், வாங்கிய பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EMb24z
via
No comments