நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சசிகலாவின் பையனூர் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சசிகலாவுக்கு சொந்தமாக சென்னை அடுத்த பையனூர் அருகே ஓஎம்ஆர் சாலையில் 784 சதுர மீட்டர் பரப்பளவில் தென்னை மரங்கள் மற்றும் பழ மரங்கள் நிறைந்த தோட்டம் உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ஓஎம்ஆர் சாலை விரிவாக்கத்துக்காக இந்த நிலத்தின் ஒரு பகுதியை கையப்படுத்துவதற்கான நடவடிக்கையை வட்டாட்சியர் மேற்கொண்டார். இதுதொடர்பாக உரிய இழப்பீடு வழங்குவதற்காக சசிகலாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CGRBIB
via
No comments