நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்?- முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கையில் தீவிரம் காட்டும் கூட்டுறவுத்துறை

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை அடமானம்பெற்று வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு வருவதால், யாருக்கு தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்குட்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, முதல்வரும் இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
அதே நேரம், நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை சுட்டிக் காட்டிய முதல்வர், ‘ஒரு குடும்பத்துக்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான எழை மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XOqix2
via
No comments