Breaking News

பாளையங்கோட்டையில் தந்தை, மகன் அடுத்தடுத்து கொலையால் பதற்றம்

பாளையங்கோட்டை அருகே அடுத்தடுத்து தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி ஜெகஜோதி நகரைச் சேர்ந்த அய்யாத்துரை என்ற பீர்மைதீன் (55), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வேலம்மாள். இவர்களது மகன் கோதர் (23). வேலம்மாளுக்கும், ஸ்ரீவைகுண்டம் கால்வாயைச் சேர்ந்த சிவன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சிவனுடன் வேலம்மாள் சென்றுவிட்டார். இருவரும் கன்னியாகுமரியில் குடியிருந்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lyXX72
via

No comments