நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது; 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: சென்னை முடங்கியது- தஞ்சையில் வீடுகள் சேதம்
வங்கக் கடலில் நாளை (நவ.29) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் வட கடலோரப் பகுதிகளில் உள்ள சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே தொடர் மழையால் தலைநகர் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சையில் மழைக்கு 159 வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3D0G6vp
via
Post Comment
No comments