Breaking News

நீரில் மூழ்கிய தண்டவாளங்கள் தென்மாவட்ட விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்: மின்சார ரயில் சேவையும் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்தது. சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதனால், சென்னை எழும்பூர், பூங்கா ரயில் நிலையம் உட்படபல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சிக்னலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால், தென்மாவட்டங்களில் இருந்து அதிகாலையில் சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய விரைவு ரயில்கள் சுமார் 2 முதல் 3 மணி நேரம் தாமதமாக வந்தன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wnhUlf
via

No comments