கரோனா தடுப்பூசி செலுத்துவதில் போலி பயனாளிகள் பதிவா?
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் போலியான பயனாளிகள் குறித்த பதிவுகள் செய்யப்படுவதாகவும், அவ்வாறு போலியான பெயர்களில் பதிவு செய்யப்படுவோருக்கான தடுப்பூசிகள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுகிறதா அல்லது எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்துக்காக அவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தீவிரமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்த கடந்த 8 வாரங்களாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதனால், தமிழகத்தில் இதுவரை 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BTNOqs
via
No comments