Breaking News

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி பாஜக போராட்டம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி வழங்க கோரி போராட்டம் நடத்திய பாஜகவினர் 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பங்கேற்பின்றி நாளை (9-ம் தேதி) மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையால் கோயில் வளாகத்தில் இரவு 8 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், கோயில் கலையரங்கம் மற்றும் வளாகத்தில் தங்கும் பக்தர்களை போலீஸார் வெளியேற்றுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oanMKC
via

No comments