Breaking News

காவல் தெய்வம் துர்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் தொடக்கம்: வரும் 19-ம் தேதி மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நேற்றிரவு தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று தொடங்கி வரும் 23-ம் தேதி வரை என 17 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் துர்கை அம்மன் அருள்பாலித்தார். இதையடுத்து இன்று (8-ம் தேதி) சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், நாளை (9-ம் தேதி) வெள்ளி மூஷீக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் மற்றும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o4B9vX
via

No comments