Breaking News

கனமழையால் 50 ஏரிகள் நிரம்பி அடையாறில் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் கலக்கிறது: வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் செங்கை ஆட்சியர் ஆய்வு

கொட்டித் தீர்த்த கனமழையால் 127 ஏரிகளில் 50 ஏரிகள் நிரம்பி, வெளியேறும் உபரிநீர் அடையாற்றில் கலக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் அடையாற்றில் விநாடிக்கு சுமார் 5,000 கன அடி நீர் கலக்கிறது. வெள்ளம் அபாயம் உள்ள பகுதிகளில் செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் படப்பை, மணிமங்கலம், தாம்பரம், ஆதனூர் உள்ளிட்ட அடையாறு ஆற்றின் சுற்றுப் பகுதிகளில் உள்ள 127 ஏரிகளில் 50 ஏரிகள் நிரம்பியுள்ளன. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் விநாடிக்கு 5,000 கனஅடி உபரிநீர் அனைத்தும், கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் மழைநீர் கால்வாய் வழியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடையாறு ஆறு முறையாக சீரமைக்கப்பட்டதால், தற்போது 80 சதவீதம் குடியிருப்புகளில் மழை வெள்ளம், பாதிப்பை ஏற்படுத்தவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mOHNXP
via

No comments