மழை பாதிப்பு: ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாகவும், நீட் விலக்கு மசோதா தொடர்பாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
வங்கக் கடலில் தொடர்ந்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய தமிழக அரசின் சார்பில், மத்திய அரசிடம் ரூ.2,629.29 கோடி நிவாரணம் கோரப்பட்டுள்ளது. இதில் ரூ.549.63 கோடியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nW3wO7
via
Post Comment
No comments