கோயில் அறங்காவலரை நியமிக்க என்ன நடைமுறை?- அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கோயில்களில் நிரப்பப்படாமல் உள்ள அறங்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், இந்த நியமனங்களை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில், அறநிலையத் துறைஅதிகாரிகள் அடங்கிய குழுவைஅமைக்கக் கோரியும் ரங்கராஜன்நரசிம்மன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hWJ9cd8
via

No comments