சிறு சிறு அசம்பாவிதங்களை தவிர சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு; ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர்: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

சிறிய அசம்பாவிதங்கள் தவிர சென்னையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி சென்னையில் நேற்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் 18 ஆயிரம் பேர், காவல் துறை அல்லாதோர் 4 ஆயிரம் பேர்என மொத்தம் 22 ஆயிரம் பேர்ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 213வாக்குச் சாவடிகள் பதற்றமானவாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gENi5lD
via

No comments