திருவான்மியூர் பகுதியில் பூத் ஸ்லிப்புடன் பணம் விநியோகித்த அதிமுகவினர்: பறக்கும்படையினர் விரட்டி பிடித்தனர்
திருவான்மியூர் 179-வது வார்டில் பூத் ஸ்லிப்புடன் சேர்த்து பணம் கொடுத்த அதிமுகவினரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் நீலகண்டன் நகர் 179-வது வார்டில் உள்ள அரசு பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது, வாக்குச்சாவடிக்கு அருகே அதிமுகவினர் ஒரு சேர் மற்றும் மேஜை போட்டு பூத் ஸ்லிப் கொடுத்து கொண்டு இருந்தனர். அதன் அருகிலேயே ஒரு ஆண், ஒரு பெண் என இருவரும் கையில் பூத் ஸிலிப்புடன் சேர்த்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ynuKhaG
via
Post Comment
No comments