Breaking News

”ஒத்த ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை” - லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து எஸ்.பி.வேலுமணி

கோவை: "அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். அதேநேரத்தில், அவரது வீட்டிலிருந்து சில பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை இரவு முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, வீட்டின் முன்பு திரண்டிருந்த அதிமுகவினரை, அவர் சந்தித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5IeqtEP
via

No comments