Breaking News

அடிப்படை வசதி இல்லா நெடுஞ்சாலை உணவகங்கள்: அரசு தலையிட பயணிகள் கோரிக்கை

செங்கல்பட்டு: தமிழக நெடுஞ்சாலைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத உணவகங்களால் பயணிகள் அவதியடைவதாகவும் அதிக விலைக்கு உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் பல உணவகங்கள் செயல்படுகின்றன. குடிநீர் முதல் கழிப்பிடம் வரை பலவித பயன்பாடுகளுக்கு பயணிகள் இந்த உணவகங்களை நாட வேண்டிய அவசியம் இருக்கிறது. பெரும்பாலும் இத்தகைய உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை இருப்பதில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XFIZYNM
via

No comments